நிபந்தனைகள்:
- பெற்றோர்கள் பாட நேரங்களில் மாணவர்களை சந்திக்க / தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதி கிடையாது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சந்திப்பதற்கு ஞாயிற்று கிழமையில் பாடம் அல்லாத நேரங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- பெற்றோர்களின் வருகை மற்றும் போன் தொடர்புகள் மாணவர்களை பாதிக்காத வகையிலும், கல்லூரி சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
- செல்போன் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தவோ, வைத்திருக்கவோ கூடாது.
- உடல் ரீதியான பாதிப்புகள் பற்றிய தகவலை முன்னரே தெரிவிக்க வேண்டும்.
- ஏழு வருடம் முழுமையாக கல்லூரியில் பயில வேண்டும். இடையில் நிற்கும் மாணவர், கல்லூரி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும்.
- தொழுகை மற்றும் ஏனைய இபாதத்துக்களை ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும்.
- அஸருக்குப்பின் மட்டுமே வெளியே செல்ல அனுமதி உண்டு. மற்ற நேரங்களில் அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது.
- மதரஸா மற்றும் பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளோ, வெளியிலோ கூட்டமாக நின்று பேசவோ, சப்தமிடவோ கூடாது.
- விடுமுறைக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் வரவேண்டும்.
- உணவு மற்றும் ஓய்வு நேரங்களில் மற்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது.
- மாணவர்கள் மதரஸா சீருடையான வெள்ளை ஜிப்பா, வெள்ளை கைலி, வெள்ளை கை பனியன் மற்றும் வெள்ளை தொப்பி ஆகியவை மட்டுமே அணிய அனுமதி உண்டு.
- மாணவர்கள் சம்மந்தமான எவ்வித தொடர்புக்கும் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
- தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,
1.மாற்றுச் சான்றிதழ் (Original TC)
2.மஹல்லா ஜமாஅத் கடிதம்
3.ரேசன்கார்டு (நகல்)
4. ஆதார் (நகல்)
5.பிறப்புச்சான்றிதழ் (நகல்) ஆகியவைகளை எடுத்து வர வேண்டும்.
நிபந்தனைகளை மீறும் மாணவர்கள் மீது மதரஸாவின்
நடவடிக்கையே இறுதியானது.